இந்தியாவில் பெண்களுக்காக வழங்கப்பட்டுள்ள அரசியலமைப்பு பாதுகாப்புகள் குறித்து எழுதுக

சரத்து 14

  • ஆணுக்கும் பெண்ணுக்கும் சம உரிமை.
  • அரசியல், பொருளாதார, சமூக நிலைகளில் சம வாய்ப்பு.

சரத்து 15(1)

  • மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் (அ) இவற்றில் ஒன்றை வைத்து அரசு பாகுபாடு காட்டக்கூடாது.

சாத்து 15(3)

  • பெண்கள், குழந்தைகளுக்கு அரசு சிறப்பு சலுகைகளை ஏற்படுத்தலாம்.
  • அரசு நியமனங்களில் அனைத்து குடிமக்களுக்கும் சம வாய்ப்பு

சரத்து 16

  • சாதி, சமய, இன, பால், வம்சாவழி, பிறப்பிட, இருப்பிட வேறுபாடுகளினால் மட்டும் அரசு வேலையைப் பெறத் தகுதி இல்லை என்று எந்தக் குடிமகனுக்கும் பாரபட்சம் காட்டக்கூடாது.

சரத்து 23:

  • மனித கடத்தல், அடிமைத் தொழிலாளர் முறை தடை.

சரத்து 39(a)

  • அனைவரின் வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்தல்

சரத்து 39(d)

  • ஆண்கள் மற்றும் பெண்களின் சமமான வேலைக்கு உத்திரவாதம்

சரத்து 42

  • சமமான ஊதியம் நியாயமான பணியிட சூழலையும், நடைமுறைப்படுத்த அரசு முயற்சித்தல்.

சரத்து 51A (e)

  • பெண்களின் கண்ணியத்தை பாதிக்கும் செயல்களை விடுத்தல்

சரத்து 300A.

  • பெண்களுக்கு சொத்துரிமை

73வது மற்றும் 74வது (சட்டத்திருத்தம்) சட்டம், 1992:

  • பஞ்சாயத்து, நகராட்சிகளில் பெண்களுக்கு 1/3 இடங்கள் ஒதுக்கீடு.
  • ஏப்ரல் 24 பெண்கள் அதிகாரமளிப்பு தினம். (73வது சட்டத்திருத்தம் செயல்பட்டிற்கு வந்த நாள்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!