போதைக்கு அடிமையாதல் என்றால் என்ன? அதனால் ஏற்படும் நடத்தை மாற்றங்கள் பற்றி விவரி.

போதைக்கு அடிமையாதல் என்பது ஒரு நீடித்த மற்றும் நாள்பட்ட நோயாகும், இது ஒரு குறிப்பிட்ட பொருளின் தொடர்ச்சியான பயன்பாட்டிற்கு வழிவகுக்கும். இந்த பொருட்கள் மருந்துகள், ஆல்கஹால் அல்லது பிற பொருட்கள் போன்றவையாக இருக்கலாம். போதைக்கு அடிமையாதல் உடல் மற்றும் மன இரண்டிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது, இது ஒரு நபரை அந்தப் பொருளைப் பயன்படுத்துவதை நிறுத்த கடினமாக்குகிறது.

மருந்துகளின் தவறான பயன்பாடு

  • மருந்துகள் வழக்கமாக மருத்துவரின் ஆலோசனையின் பேரில் நோய் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்பட்டு, நோயிலிருந்து கைவிடப்படுகின்றன.
  • குணமடைந்தபின் மருந்துகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொள்பவர்கள், அதற்கு அடிமையாகின்றனர். இதுவே மருந்துக்கு (போதைக்கு) அடிமையாதல் அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என்றழைக்கப்படுகிறது.
  • ஒரு நபரின் உடல், மனம் ஆகியவற்றின் செயல்பாடுகளை உற்சாகப்படுத்துவதன் மூலமோ, மனச்சோர்வு அல்லது தொந்தரவுக்கு உள்ளாக்குவதன் மூலமோ, அந்நபரின் உடல், உயிரியல், உளவியல் அல்லது சமூக ரீதியிலான நடத்தையை மாற்றி அமைக்கும் மருந்து போதை மருந்து என அழைக்கப்படுகிறது. 
  • இந்த மருந்துகள் மைய நரம்பு மண்டலத்துடன் தொடர்பு கொண்டு உடல் மற்றும் மனதளவில் பாதிப்பை உண்டாக்குகின்றன.

மருந்துகளின் வகைகள்

  • சில வகையான மருந்துகள் மனோவியல் மருந்துகள் எனப்படுகின்றன. 
  • அவை மூளையின் மீது செயல்பட்டு, அவற்றின் செயல்பாடுகளான நடத்தை, உணர்வறி நிலை, சிந்திக்கும் திறன், அறிநிலை ஆகியவற்றை மாற்றியமைக்கின்றன. 
  • இவை மனநிலை மாற்றும் மருந்துகள் என குறிப்பிடப்படுகின்றன. 

மருந்தினை சார்ந்திருத்தல்

  • இம்மாதிரியான மருந்துகளை உட்கொண்டு, முழுவதுமாக அம்மருந்துகளை சார்ந்துள்ள நபர்களால், அம்மருந்துகள் இன்றி உயிர்வாழ இயலாது. இந்நிலையானது மருந்தினை சார்ந்திருத்தல் எனக் குறிப்பிடப்படுகிறது.

உடல் மற்றும் மனம் சார்ந்திருத்தல்

    • இயல்பான நல்ல நிலையில் தன்னுடைய உடல்செயலியல் நிலையைப் நிலையைப் பராமரிக்க மருந்துகளைச் சார்ந்திருத்தல்
    • மருந்துகள் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவுகின்றன என்ற உளவியல் சார்ந்த உணர்வைக் கொண்டிருத்தல்.
  • மருந்துகளின் தவறான பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தல் மீதான சர்வதேச நாள் ஜுன் 26 1985 ஆம் ஆண்டில் போதையூட்டும் மருந்துகள் மற்றும் மனோவியல் மருந்துகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

மருந்துகள் பயன்பாட்டின் நடத்தை மாற்றங்கள்

  • இளம் பருவத்தினரிடையே ஏற்படும் எதிர்மறையான விளைவுகளாவன
  • படிப்பில் செயல்திறன் குறைதல், கல்லூரி மற்றும் பள்ளிகளில் இடைநிற்றல்.
  • தன் சுகாதாரத்தில் ஆர்வமின்மை, தனிமை, மன அழுத்தம், சோர்வு, ஆக்ரோஷமான நடத்தைகள், குடும்பம் மற்றும் நண்பர்களுடனான உறவுநிலை சிதைந்து போகுதல்.
  • உணவு மற்றும் தூங்கும் பழக்கங்கள் மாறுபடுதல்.
  • உடல் எடை மற்றும் பசி ஆகியவற்றில் ஏற்படும் ஏற்ற இறக்கம்.
  • எப்பொழுதும் மருந்துகள் பெறுவதற்கான பணம் கிடைக்கும் எளிய வழிகளைத் தேடுதல்.
  • எய்ட்ஸ் மற்றும் ஹெபடைடிஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள்.
  • உலக (WHO) சுகாதார நிறுவனம் 1984 மருந்துகளின் போதை அடிமையாதல்) அல்லது மருந்துகளின் தவறான பயன்பாடு என்ற வார்த்தைக்குப் பதிலாக மருந்துகளை சார்ந்திருத்தல் என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!