மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் பற்றி சிறு குறிப்பு எழுதுக  

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம்

  • ஷரத்து 315-இன்படி ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இருத்தல் வேண்டும்.

ஷரத்து 316 மற்றும் ஷரத்து 317

  • மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம், பதவிக்காலம், பதவி நீக்கம் மற்றும் இடைநீக்கம் போன்றவை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு வரையறை செய்யப்பட்டுள்ள ஷரத்து 316 மற்றும் 317-இன்படியே தான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

நியமனம்

  • மாநில பணியாளர் தேர்வாணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அம்மாநில ஆளுநர் நியமனம் செய்கிறார்.

பதவி விலகல்

  • இராஜினாமா கடிதம் ஆளுநரிடம் சமர்பிக்கப்பட வேண்டும். 
  • ஆனால் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடமே உள்ளது.

எண்ணிக்கை மற்றும் பணிநிலை

  • ஷரத்து 318 – ன் படி மத்திய பணியாளர் தேர்வாணையம் மற்றும் கூட்டுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர் எண்ணிக்கையையும் உறுப்பினர்களின் பணி நிலைமையையும் குடியரசுத்தலைவர் முடிவு செய்வார்.
  • மாநில பணியாளர் தேர்வாணையத்தைப் பொருத்த வரையில் ஆளுநர் முடிவு செய்வார். 
  • ஆனால் உறுப்பினர்களின் பணிநிலையை அவர்கள் பதவியேற்ற பிறகு அவர்களுக்கு பாதகம் விளைவிக்கும் வகையில் மாற்றம் செய்யக்கூடாது.

ஷரத்து 319

  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் தனது பணிமூப்பிற்குப் பிறகு வேறு மத்திய – மாநில அரசுப் பணிகளில் நியமிக்கப்பட தகுதியற்றவர்களாவர்.
  • அதேசமயம் மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் வேறு மாநில அரசுப் பணியர் தேர்வாணையத் தலைவர் அல்லது மத்தியப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் / உறுப்பினராக நியமிக்கப்படத் தகுதி வாய்ந்தவர்.
  • மத்திய, அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஏதாவதொரு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராகவோ அல்லது மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராகவோ நியமிக்கப்படத் தகுதியுள்ளவராவார். 
  • மாநிலத் தேர்வாணைய உறுப்பினர்கள் பணிக்காலத்திற்குப் பிறகு சொந்த / பிற மாநில தேர்வாணையத் தலைவராகவோ, மத்தியப் பணியாளர் தேர்வாணையத் தலைவராகவோ, உறுப்பினராகவோ நியமிக்கப்படத் தகுதி வாய்ந்தவராவர். 

தேர்வாணையத்தின் பணிகள் 

  • ஷரத்து 320 மத்திய – மாநில பணியாளர் தேர்வாணையங்களின்
    பணிகளை வரையறுக்கிறது. 
  • மத்திய பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும். 
  • மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையமானது மாநில அரசுகளுக்குத் தேவையான பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
  • இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்கள் கேட்டுக் கொண்டால் கூட்டுப்பணி நியமனத்திற்குத் தேவையான செயல்முறைத் திட்டத்தினை மத்தியப் பணியாளர் தேர்வாணையம் வகுத்தளிக்க வேண்டும்.
  • மேலும் தேர்வாணையம் ஆலோசனை செய்ய வேண்டிய தருணங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் பணிகள் ஒதுக்கீடு

  • ஷரத்து 321-இன்படி மத்தியப் பணியாளர் தேர்வாணையத்திற்கு நாடாளுமன்றமும் மாநிலப் பணியாளர் தேர்வாணையத்திற்கு சட்டமன்றமும் கூடுதல் பணிகளை ஒதுக்கும் அதிகாரம் கொண்டவையாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!