ஒத்துழையாமை இயக்கம் 1920-22

ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்கம்

  • கிலாபத், பஞ்சாப் ஜாலியன் வாலாபாக் படுகொலை ஆகிய இரண்டு காரணங்களால் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கப்பட்டது.
  • துருக்கி சுல்தான் மற்றும் இசுலாமிய புனிதத் தலங்கள் தொடர்பானது கிலாபத் இயக்கம்.
  • ஜாலியன் வாலாபாக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு பஞ்சாப் கொடுமை எனப்பட்டது.
  • ஜாலியன் வாலாபாக்கில் நடத்தப்பட்ட கொடுமைகளுக்குக் காரணமான ரெஜினால்டு டையர், மைக்கேல் ஓ டையர் இருவரையும் பிரிட்டிஷ் நீதிமன்றங்கள் குற்றங்களில் இருந்து விடுதலை செய்தது.
  • ஒத்துழையாமை இயக்க தோழர்களுக்குத் காந்தியடிகளும் காங்கிரசும் முஸ்லிம் லீக் துணையாக நின்றனர்.
  • கிலாபத் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களாக மௌலானா அபுல் கலாம் ஆசாத், முகமது அலி மற்றும் மௌலானா சௌகத் அலி என்ற சகோதரர்கள் ஆகியோர் விளங்கினர்.

கிலாபத் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கம் – 1920

  • காந்தியடிகளின் வற்புறுத்தலின் பேரில் கிலாபத் மாநாட்டில் 1920 ஆகஸ்டு 31 முதல் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது.

அலகாபாத் அனைத்துக் கட்சிக் கூட்டம் – 1920

  • அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு நீதிமன்றங்களைப் புறக்கணிக்கும் திட்டத்தை அலகாபாத்தில் கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டம் முடிவு செய்தது.

கல்கத்தா சிறப்பு அமர்வு – 1920

  • 1920ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் சிறப்பு அமர்வில் காலனி ஆதிக்க அரசுடன் ஒத்துழையாமையைக் கடைபிடிப்பது என்ற காந்தியடிகளின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • கிலாபத் மற்றும் பஞ்சாப் குறைகள் சரி செய்யப்பட்டு தன்னாட்சி அரசு நிறுவப்படும் வரை இந்த ஒத்துழையாமையைக் கடைபிடிக்க உறுதி ஏற்கப்பட்டது.
  • ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் வரிகொடா இயக்கம், சட்ட மறுப்பு இயக்கம் போன்ற பல இயக்கங்களைப் பின்னர் இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

நாக்பூர் காங்கிரஸ் மாநாடு – 1920

  • 1920ஆம் ஆண்டு நாக்பூரில் நிகழ்ந்த காங்கிரஸ் அமர்வில் முந்தைய ஒத்துழையாமை இயக்க தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
  • இந்தியர்கள் வன்முறையற்ற வகையில் ஒத்துழையாமை இயக்கத்தை பின்பற்றினால் ஓராண்டுக்குள் சுயராஜ்யத்தைப் பெற்றுத் தருவதாக காந்தியடிகள் உறுதி கூறினார்.
  • மொழி சார்ந்த மாகாண காங்கிரஸ் கமிட்டிகளை அங்கீகரித்து அமைப்பதற்கு வகை செய்யும் மற்றொரு முக்கியத் தீர்மானம் நாக்பூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
  • இதனால் பெரும் எண்ணிக்கையிலானப் பணியாளர்கள் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்தனர்.
  • 4 அணா(25 பைசா) என்கிற கட்டணத்தில் கிராமத்தினரைக் காங்கிரஸில் பணியாளர்கள் சேர்க்கவேண்டும்.
  • ஆனால் மக்கள் போராட்டத்தை எதிர்த்தப் பழைமைவாதிகள் பலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக வழி அமைத்தது.

ஒத்துழையாமை இயக்கத்தில் காந்தியடிகளின் தாக்கம்

  • தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்ட அலி சகோதரர்கள் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
  • சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்குமாறு மக்களுக்கு அந்தந்த பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் அழைப்பு விடுத்தன.
  • இந்தியாவின் பல நகரங்களுக்கு 1921ல் வேல்ஸ் இளவரசர் மேற்கொண்ட பயணமும் புறக்கணிக்கப்பட்டது.
  • உத்தரப்பிரதேசம், வங்காளம், அசாம், பீகார், ஒரிசா(ஒடிசா) ஆகியவற்றின் பல பகுதிகளில் இருந்த கீழ்வகுப்பு மக்கள் இந்த போராட்டங்கள் காரணமாக தீவிரமாக அவமதிக்கப்பட்டதாக இந்திய அரசுத்துறைச் செயலாளருக்கு எழுதியக் கடிதத்தில் அரசப்பிரதிநிதி (வைசிராய்) ஒப்புக்கொண்டிருந்தார்.

பர்தோலி வரிகொடா மற்றும் சட்ட மறுப்பு இயக்க அறிவிப்பு

  • அரசு ஏழு நாட்களுக்குள் பத்திரிக்கைச் சுதந்திரத்தை மீட்டு சிறைக் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் 1922 பிப்ரவரியில் பர்தோலியில் வரிகொடா பிரச்சாரங்கள் உட்பட சட்டமறுப்பு இயக்கத்தை தொடங்கப் போவதாக காந்தியடிகள் அறிவித்தார்.

தென்னிந்தியாவில் ஒத்துழையாமை இயக்கம்

  • ஒத்துழையாமை போராட்டத்தில் தென்னிந்தியா முன்னேறிச் சென்றது.
  • ஆந்திர விவசாயிகள் ஜமீன்தார்களுக்கு வழங்க வேண்டிய வரிகளை நிறுத்தி வைத்தனர்.
  • சிராலா-பெராலாப் பகுதியைச் சேர்ந்த அனைத்து மக்களும் வரி செலுத்த மறுத்துக் கூட்டம் கூட்டமாக நகரங்களைக் காலி செய்து வெளியேறினர்.
  • நூற்றுக்கணக்கான கிராம பட்டேல்களும் ஷான்போக்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
  • கேரளாவில் ஜென்மி-க்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டங்களை நடத்தினர்.

தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம்

  • தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் எஸ். சத்தியமூர்த்தி, சி. இராஜாஜி, தந்தை ஈ.வே.ரா. பெரியார் ஆகிய தலைவர்கள் தலைமையில்  நடத்தப்பட்டது.

செளரி சொரா சம்பவம் மற்றும் ஒத்துழமையாமை இயக்கத்தைத் திரும்பப் பெறுதல்

    • மலபார் மற்றும் ஆந்திராவில் இரண்டு வன்முறைக் கிளர்ச்சிகள் நடந்தன.
    • கரையோர ஆந்திராவின் ராம்பா பகுதியில் அல்லூரி சீதாராம ராஜூ தலைமையில் பழங்குடியினர் கிளர்ச்சி செய்தனர்.
    • மலபாரில் முஸ்லிம்(மாப்பிள்ளை) விவசாயிகள் ஆயுதமேந்தி உயர் வகுப்பு நிலப்பிரபுக்கள் மற்றும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
    • பழங்குடிகள் உட்பட அனைத்து வகுப்பு மக்களையும் சட்டமறுப்பு இயக்கம் ஈர்த்தது.
    • உத்தரப்பிரதேசத்தில் கோரக்பூர் மாவட்டத்தில் சௌரி சௌராவில் மதுக்கடைகள் மற்றும் அதிக விலைக்குப் பொருட்கள் விற்கப்படுவதைக் கண்டித்து ஒரு தன்னார்வக் குழு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.
    • 1922 பிப்ரவரி 5ல் 3,000 நபர்களுடன் நடந்த ஒரு காங்கிரஸ் பேரணி மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் ஆர்ப்பாட்டக்காரர்கள் காவல் நிலையத்தைக் எரித்ததில் 22 போலீசார் உயிரிழந்தனர்.
    • சௌரி சௌரா நிகழ்வை அடுத்து காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெறுவதாக அறிவித்தார்.
    • ஒத்துழையாமை இயக்கத்தைத் திரும்பப்பெறும் காந்தியடிகள் முடிவை பர்தோலியில் காங்கிரஸ் செயற்குழு ஏற்றுக்கொண்டது.
    • இந்த முடிவை இளம் தொண்டர்கள் எதிர்த்த நிலையில் காந்தியடிகள் மீது நம்பிக்கை கொண்ட இதரத் தொண்டர்கள் இது ஒரு தந்திரமான முடிவு என்று கருதினர்.
    • காந்தியடிகள் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
    • காந்தியடிகள் கைது பற்றி ஜவஹர்லால் நேருவும் சுபாஷ் சந்திர போஸும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
    • துருக்கி மக்கள் முஸ்தபா கமால் பாட்சா தலைமையில் கிளர்ந்தெழுந்து சுல்தானிடம் இருந்து அரசியல் அதிகாரத்தைப் பறித்து கலிபா என்ற நடைமுறையை ரத்து செய்தன்ர.
    • மதமும் அரசியலும் இணைந்து பயணிக்க முடியாது என்று அறிவித்த நிலையில் கிலாபத் இயக்கம் தேவையற்றுப் போனது.
    • இப்படியாக ஒத்துழையாமை இயக்கம் முடிவுக்கு வந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!