தேர்தல் சிறப்பு பார்வையாளர்களின் பணிகள் யாவை?

தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள்

  • தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் சிறப்பு பார்வையாளர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாநிலங்களில் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் மேற்கொள்ளும் பணிகளை மேற்பார்வை செய்து கண்காணிப்பார்கள்.
  • உளவுத்துறை உள்ளீடுகள்
  • சி-விஜில்
  • வாக்காளர் உதவி இணைப்பு – ஹெல்ப்லைன் போன்றவற்றின் மூலம் பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் கடுமையான, பயனுள்ள அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வார்கள்.
  • சுதந்திரமான, நியாயமான, வாக்காளர்களுக்கு இணக்கமான தேர்தலை உறுதி செய்வார்கள்
  • சிறப்பு பார்வையாளர்களை தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு அனுப்புவதன் முக்கிய நோக்கம், தேர்தல் தயார்நிலையைப் பாரபட்சமற்ற முறையில் மதிப்பிடுவது.
  • தேர்தலில் முக்கியமான இடைவெளிகளைக் கண்டறிந்து, பாரபட்சமற்ற, தூண்டுதலற்ற, அமைதியான, பாதுகாப்பான தேர்தலை உறுதிசெய்யத் தேர்தல் இயந்திரங்களை வழிநடத்துவதே நோக்கம்.

மற்ற பணிகள்

  • சிறப்புப் பார்வையாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்; தேர்தல் செயல்முறை முழுவதும் அப்போதைக்கு அப்போது என்ற அடிப்படையில் தேர்தல் ஆணையத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும்; தேவைப்படும் திருத்த நடவடிக்கைகளை ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும்.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!