பெண்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றி விவரித்து எழுதுக

  • தமிழகத்தின் பாலின விகிதம் 2011ம் ஆண்டு 996/1000 ஆக அதிகரித்துள்ளது.
  • 2001ம் ஆண்டு 64.55% ஆக இருந்த பெண்களின் கற்றல் வீதம் 2011 ம் ஆண்டு 73.44% ஆக அதிகரித்துள்ளது.
Contents show

பெண்களுக்காக தமிழக அரசின் நல திட்டங்கள்

சுகாதாரம்

  • பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் மகளிர் சுகாதார திட்டம்:

  • இத்திட்டத்தின் கீழ், 15 வயது முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து பெண்களுக்கும் மாதம் ஒருமுறை இலவச மாதவிடாய் சுகாதாரப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

பெண்கள் நல மருத்துவமனைகள்:

  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் நல மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு, பெண்களுக்கு சிறப்பு மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றன.

பெண்கள் நல மையங்கள்:

  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெண்கள் நல மையங்கள் அமைக்கப்பட்டு, பெண்களுக்கு சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் உதவிகள் வழங்கப்படுகின்றன.

கல்வி

  • பெண்களின் கல்வி பெறுவதில் உள்ள தடைகளை நீக்கவும், பெண்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம்:

இத்திட்டத்தின் கீழ், 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில், உயர் கல்வியில் சேர்ந்துள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் ரூ. 1000/- மாதந்தோறும் அவர்கள் பட்டப்படிப்பு முடியும் வரை பெற தகுதியுடைவர்கள்.

கலைஞர் கல்வி உரிமைத் தொகை திட்டம்:

  • இத்திட்டத்தின் கீழ், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஏழை பெண்களுக்கு மாதம் ரூ. 1000/- தொகை வழங்கப்படுகிறது.

பெண்கள் உயர்கல்விக்கான கல்வி உதவித் திட்டம்:

  • இத்திட்டத்தின் கீழ், ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் கல்லூரிகளில் சேர்ந்து படிப்பதற்கு ரூ. 10,000/- முதல் ரூ. 20,000/- வரை கல்வி உதவி வழங்கப்படுகிறது.

பெண்கள் நலம்

தொட்டில் குழந்தை திட்டம்

  • பெண் சிசுக்கொலையை தடுத்து, பெண் குழந்தைகளை காப்பாற்றும் இத்திட்டம் 1992ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
  • மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றொரு குடும்பத்தால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றனர்.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்:

  • அரசின் நிதியைக் கொண்டு பெண் குழந்தையை காத்து, அதிகாரமளிப்பதன் மூலமாக பாலியல் பாகுபாட்டைத் தடுத்தல்.
  • கீழ்காணும் குறிக்கோள்களை உடையது.
  • பள்ளியில் பெண் குழந்தையை சேர்த்தல், தொடர் வருகையை உறுதி செய்தல், குறைந்தபட்ச இடைநிலைக் சுல்விடையாவது வழங்குதல்.
  • 18 வயதிற்கு பின்னரே திருமணம் செய்ய ஊக்குவித்தல்.
  • இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் குடும்பக் கட்டுப்பாடு செய்ய ஊக்குவித்தல்.

சிவகாமி அம்மையார் நினைவு பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம்:

  • வறுமை நிலையில் உள்ள குடும்பங்களின் பெண் குழந்தைகளுக்கு நிதியுதவி

தகுதி நிலைகள்:

  • திட்டம் – 1 க்கு குடும்ப வருமானம் ரூ. 50,000/- ஒரு ஆண்டு திட்டம் 11 க்கு குடும்ப வருமானம் ரூ.12,000/ ஆண்டு
  • திட்டம் 1 (ஒரு பெண் குழந்தைக்கான திட்டம்) ன் கீழ் விண்ணப்பிக்கையில் பெண் குழந்தைக்கு 3 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். இரு குழந்தைகள் இருப்பின், இரண்டாம் பெண் குழந்தைக்கு 3 வயது நிரம்புவதற்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
  • பெற்றோரில் ஒருவர் 35 வயதிற்குள் கருத்தடை செய்துகொள்ள வேண்டும்.
  • குடும்பத்தில் ஒரு/இரு பெண் குழந்தைகள் மட்டுமே இருக்க வேண்டும். ஆண் குழந்தை இருக்கக் கூடாது. தத்தெடுக்கவும் கூடாது.

அம்மா இருசக்கர வாகனத் திட்டம்:

  • மொப்பெட் (அ) ஸ்கூட்டர் வாங்கும் போது அரசு 50% (அ) 25,000 வரை மானியமாக வழங்கும்.
  • தகுதி: 18-40 வயதில், வேலைவாய்ப்பில் உள்ள தமிழக பெண்கள், அவர்களின் மொத்த வருமானம் 2.50 லட்சத்திற்குள் இருத்தல். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இத்திட்டத்திற்கு தகுதி வாய்ந்தவர்.

சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையற் கருவிகள் வழங்கும் திட்டம்:

  • விதவைகள், கைவிடப்பட்ட மனைவிகள், பொருளாதார ரீதியில் பின்தங்கிய மகளிர், மாற்றுத் திறனாளி ஆண் (ம) பெண், சமூகத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு மூலம் வருமானத்தை பெருக்கும் திட்டம்.

பழங்குடியின பெண்களுக்கான தையற் பயிற்சிக் கூட்டங்கள்:

  • சேலம், திருவண்ணாமலையில் பழங்குடியின பெண்களுக்காக பிரத்யேகமாக செயல்படுகிறது.

பெண்களுக்கு அரசு பேருந்தில் கட்டணமில்லா பயணம்

  • பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர், திருநங்கையர் உட்பட அனைத்து மகளிரும் தமிழ்நாடு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி 2021 ஆம் ஆண்டு முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு

  • பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பெண்கள் உதவி எண் 181:

  • பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக தமிழக அரசு 181 என்ற பெண்கள் உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது.

பெண்கள் காப்பகங்கள்:

  • பெண்களுக்கு பாதுகாப்பான இடத்தை வழங்குவதற்காக தமிழக அரசு பல்வேறு பகுதிகளில் பெண்கள் காப்பகங்கள் அமைத்துள்ளது.

பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்:

  • பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வழங்குதல்

1 thought on “பெண்களுக்காக தமிழக அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள் பற்றி விவரித்து எழுதுக”

  1. எனக்கு இரண்டு பெண்குழந்தைகள் அவர்கள் படிப்பிற்கு உதவி செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . . இப்படிக்கு , ரா.ராஜேஸ்வரி.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!