மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் – 1919

மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் – 1919 மற்றும் இந்திய கவுன்சில்கள் சட்டம்1919

  • மாண்டேகு – செம்ஸ்போர்டு திட்டம் 1918ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
  • 1918ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பம்பாயில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் சிறப்பு அமர்வில் இந்தத் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது.
  • சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையிலான மிதவாத/தாராளக் கொள்கையுடைய அரசியல் குழு பெரும்பான்மைக் கருத்தை எதிர்த்தது.
  • இந்திய லிபரல் (தாராளமய) கூட்டமைப்பு என்ற பெயரில் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையிலான தனது சொந்தக் கட்சியைத் தொடங்க வழியமைத்தது.
  • இந்தியாவுக்கான பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் எட்வின் 􀁉மாண்டேகுவும் அரசப்பிரதிநிதி (வைசிராய்) செமஸ்போர்டும் 1919ல் இந்தியாவுக்கான அரசியல் சாசன மாற்றங்களை அறிவித்னர்.
  • மாண்டேகு – செம்ஸ்போர்டு சீர்திருத்தங்கள் பின்னர் இந்திய கவுன்சில்கள் சட்டம்-1919 என்று அழைக்கப்பட்டன.
  • பெரும்பான்மையாகத் தேர்தெடுக்கப்பட்டவர்களுடன் 􀁉மாகான சட்டபேரவைகளைப் விரிவுப்படுத்த இந்திய கவுன்சில்கள் சட்டம்-1919 வழிவகை செய்தது.
  • மாகாண அரசுகளுக்கு இரட்டை ஆட்சியின் கீழ் நிர்வாகத்தில் அதிகப் பங்கை இந்திய கவுன்சில்கள் சட்டம்-1919 வழங்கியது.
  • இந்த திட்டத்தின கீழ் சட்டம் ஒழுங்கு, நிதி ஆகிய􀁊 முக்கிமான துறைகள் ஆங்கிலேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்கள் அனைவரும் ஆளுநர்களின நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ வந்தனர்.
  • சுகாதாரம், கல்வி, உள்ளாட்சி போன்ற இ்தர துறைகள் இந்தியப் பிரதிநிதிகளுக்கு மாற்றப்பட்டது.
  • மாற்றப்பட்ட துறைகளுக்குப் பொறுப்பேற்ற அமைச்சர்கள் சட்டப்பேரவைகளுக்குக் கடமைப்பட்டவர்கள் ஆனார்கள்.
  • ஒதுக்கீடு செய்யப்பட்டத் துறைகளுக்குப் பொறுப்பேற்றவர்கள் சட்டப்பேரவைகளுக்குக் கடமைப்பட்டவர்கள் அல்ல.
  • மேலும் சிறப்பு (􀁉மறுப்பானை) அதிகாரங்களின கீழ் அந்தந்த மாகாணங்களின ஆளுநர்கள் அமைச்சர்களை அதிகாரம் செய்ய􀁊 இயலும்.
  • மத்திய􀁊 சட்டப்பேரவை, இரண்டு அவைகளுடன் கூடிய இரண்டு அடுக்கு சட்டப்பேரவை மற்றும் மேலவையை􀁊 உருவாக்கியது.
  • மத்திய􀁊 சட்டப்பேரவையில் 144 மொத்த உறுப்பினர்களில் 41 உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்களாக இருந்தனர்.
  • மாநிலங்களவை என்று அழைக்கப்பட்ட மேலவையில் 60 மொத்த உறுப்பினர்களில் 26 உறுப்பினர்கள் நியமனம் உறுப்பினர்களாக இருந்தனர்.
  • கவர்னர் ஜெனரல் மற்றும் அவரது நிர்வாக கவுன்சில் மீது இரண்டு அவைகளுக்கும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை.
  • ஆனால் மாகாண அரசுகள் மீது மத்திய அரசுக்கு முழுக்கட்டுப்பாடு இருந்தது.
  • இதன் விளைவாக, ஐரோப்பிய/ஆங்கிலேய அதிகாரிகளின் கைகளில் அதிகாரம் குவிந்திருந்தது.
  • வாக்களிக்கும் உரிமையும் தொடர்ந்து கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது.

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!